மாவட்டத் தலைவர் மு.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முத்துமணி வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து முன்னாள் மாவட்டத் தலைவர் பி.சிவக்குமார் பேசினார். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் ஊதியக் குழு அறிவித்துள்ள சலுகைகள் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தை கணக்கிட்டு தேர்வுநிலை வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், தொழிற் கல்வி சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும், கல்வித் துறை அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.