தேனி மாவட்டத்தில் திருவிழாக்களுக்காக ஏராளமான மூங்கில் மரங்களை வெட்டிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் திருவிழா ஆரம்பமாகும்போது, வனப்பகுதிக்குச் சென்று மூங்கில் மரத்தை வெட்டி எடுத்து வந்து பூமி பூஜை செய்வர். இவ்வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
தற்போது ஒன்று அல்லது இரண்டு மரங்களை வெட்டுவதற்கு பதிலாக ஏராளமான மூங்கில் மரங்களை வெட்டி வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.
இதற்கு வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.
பொதுவாக உயர்ந்த மரங்களான ஓக், பைன், யூகலிப்ட்ஸ், மூங்கில் போன்றவை இயற்கையாகவே அதிக அளவில் மழையைத் தரக்கூடியவை.
இப்படிப்பட்ட வளமிக்க நூற்றுக்கணக்கான மூங்கில் மரங்களை வெட்டுவது வனவளத்தை அழிக்கும் செயல் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இனிவரும் காலங்களில் திருவிழா என்ற பெயரில் மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்

ஓவர்கள் குறைக்கப்படாது: ஆர்சிபி பந்துவீச்சு; அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
