பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெரியகுளத்தில் போலி செய்தியாளர் கைது

தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழ் அடித்து வசூலில் ஈடுபட்ட போலி செய்தியாளர் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:23 am

DIN

தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழ் அடித்து வசூலில் ஈடுபட்ட போலி செய்தியாளர் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தேனியை சேர்ந்தவர் குருசீனிவாசன்  (45) மற்றும் ஜான் மணி, வி.செல்வராஜ், சாதிக்பாட்ஷா ஆகியோர் தங்களை பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொண்டு, தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு போலி அழைப்பிதழ் அச்சிட்டு, அதில் தமிழக துணை முதல்வர் மற்றும் தேனி தொகுதி எம்பி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயரை போட்டு பண வசூலில் ஈடுபட்டுள்ளதாக தேனியை சேர்ந்த ராஜா முகமது என்பவர் தென்கரை காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
இதன் பேரில்  போலீஸார் வழக்குப் பதிந்து, குருசீனிவாசனை கைது செய்தனர். மேலும் ஜான் மணி, செல்வராஜ், சாதிக்பாட்ஷா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.