எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தேனியில் கண்மாய் அருகே பிடிபட்ட பெண் உடும்பு

தேனியில் மீறுசமுத்திரம் கண்மாய் அருகே புதன்கிழமை தீயணைப்புத் துறையினரிடம் பிடிபட்ட பெண் உடும்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:44 am

DIN

தேனியில் மீறுசமுத்திரம் கண்மாய் அருகே புதன்கிழமை தீயணைப்புத் துறையினரிடம் பிடிபட்ட பெண் உடும்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேனி,  வீரப்பஅய்யனார் மலைகரட்டில் சில நாள்களுக்கு முன் பெய்த பலத்த மழையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட உடும்பு ஒன்று, மீறு சமுத்திரம் கண்மாய் அருகே உலவுவதை பொதுமக்கள் பார்த்தனர்.
இந்நிலையில், கண்மாய் அருகே உழவர் சந்தை வளாகம் எதிர்புறம் காலியிடத்தில் உள்ள புதரில் உடும்பு இருப்பதை பார்த்த பொதுமக்கள், இது குறித்து தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் பணியாளர், புதரில் இருந்த உடும்பை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கண்மாய் கரை அருகே பிடிபட்ட 3 அடி உயரமுள்ள பெண் உடும்பிற்கு 6 வயது இருக்கலாம் என்றும், உடும்பை வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட உள்ளதாகவும் தேனி வனத் துறை பணியாளர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.