/

காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

போடி அருகே ராசிங்காபுரம் கிராமம் பாண்டுரங்கன் தெருவில் வசிப்பவர் பாலசுப்பிரமணி (52). காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:14 am IST

போடி அருகே ராசிங்காபுரம் கிராமம் பாண்டுரங்கன் தெருவில் வசிப்பவர் பாலசுப்பிரமணி (52). காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர். இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் பார்த்த போது, வீட்டின் வெளிக் கதவுகள் திறந்து கிடந்ததுடன், பீரோவில் இருந்த தங்க கவர்னர் மாலை, கருகமணி மாலை, கை சங்கிலி, தங்கத் தோடு ஆகிய 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.