தேனிமாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் திங்கள் கிழமை முதல் தொடங்கியது.
கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் திங்கள் கிழமை முதல் தொடங்கியது. தேனிமாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் கூடலூரில் உள்ள ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகளை, பூமி பூஜை செய்து கம்பம் பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பினர் தொடங்கி வைத்தனர்.
குளத்தில் உள்ள மண் மற்றும் களிமண்களை விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் போன்ற வற்றை விண்ணப்பத்துடன் இணைத்து இலவசமாகவே எடுத்துக்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வணிக நோக்கில் மண் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 500 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசனம் பெறும் அளவில் அமைந்துள்ள ஒட்டான்குளம் சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே குளத்தில் தண்ணீரின், கொள்ளளவு அதிகரிக்கும் என்றும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

8 வகைகளில் துணி துவைக்கலாம்! புதிய வாஷிங் மெஷின் அறிமுகம்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: 1 டாலர் - ரூ. 96.83! 13 காசுகள் சரிவு!

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயிலில் மே 26-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா!
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி


