போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள் கிழமை ஜீப், இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் கணவன் மனைவி காயமடைந்தனர்.
போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிவாசகன் (35). இவருக்கு சொந்தமான தோட்டம் கஜானாப்பாறையில் உள்ளது. தோட்டத்திற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மணிவாசகமும் இவரது மனைவி மேனகா (25) என்பவரும் சென்றனர். போடிமெட்டு மலைச்சாலை எஸ் வளைவு அருகே சென்றபோது அதிவேகமாக வந்த ஜீப், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணிவாசகம் மற்றும் மேனகா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜீப்பை ஓட்டி வந்த போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த மணிவேல் (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்! நேரலை

முதல்வர் விஜய் தலைமையில் 7 பட்டியலின அமைச்சர்கள்! இதுவரை இல்லாத அதிகபட்சம்!!

ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி

அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


