கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை நிறைவு விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், மாணவியர் பேரவை நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இயற்பியல் துறைத்தலைவி தவராணி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில், மாணவியர் பேரவை கடந்த ஓராண்டாக செய்த நிகழ்ச்சிகளை பாராட்டி செயலாளர் என்.ராமகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.
மேலும் பல்வேறு துறை சார்ந்த மற்றும் நுண்கலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் இணைச் செயலர் ரா.வசந்தன், முதல்வர் ஜி.ரேணுகா, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பேரவை செயலர் நாகநந்தினி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் கலங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


