தேவாரத்தை சேர்ந்த பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடியை அடுத்த தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆர்த்தி (29). இவருக்கும் தூத்துகுடியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ஆர்த்திக்கு 55 பவுன் நகைகளும், மதன்ராஜுக்கு 6 பவுன் நகையும் 5 லட்சம் மதிப்புள்ள பொருள்களும் சீதனமாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், தொழில் தொடங்க போவதாக கூறி ஆர்த்தியின் நகைகளை வாங்கி மதனராஜும் அவரது குடும்பத்தினரும் அதில் சில நகைகளை விற்றுள்ளனர். இதனை ஆர்த்தி திரும்ப கேட்டபோது மேலும் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தேனி எஸ்.பி. பாஸ்கரனிடம் ஆர்த்தி புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் போடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னமயில், சார்பு ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மதனராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு
செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீண்டும் இணையும் டிசி கூட்டணி!

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly
ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு!

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


