சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பெரியகுளம் சாய்பாபா கோயில் உண்டியல் திருட்டு

பெரியகுளம் சாய்பாபா கோயிலில் உண்டியல் திருடப்பட்டதாக, காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:24 am IST

பெரியகுளம் சாய்பாபா கோயிலில் உண்டியல் திருடப்பட்டதாக, காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
      பெரியகுளத்தில் உள்ள சாய்பாபா கோயிலை ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் நிர்வாகி முத்துமகேஸ்வரன் (46) பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். திங்கள்கிழமை காலை கோயிலை திறந்துள்ளார். அப்போது, கோயிலில் இருந்த இரண்டு தகர உண்டியல்கள் மற்றும் ஒரு சில்வர் உண்டியல் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. கோயில் சுவர் ஏறி குதித்து உண்டியல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.    இது குறித்து முத்து மகேஸ்வரன் தென்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.