ஆடுகள் திருட்டு: 3 பேர் கைது
ஆண்டிபட்டி போலீஸார் சனிக்கிழமை இரவு அங்குள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.


ஆண்டிபட்டி போலீஸார் சனிக்கிழமை இரவு அங்குள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேனில் 3 பேர் ஆடுகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது உசிலம்பட்டி அருகே மானூத்து என்ற இடத்தில் 5 ஆடுகளை திருடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சந்திரன் (31), மின்னல் ரவி (30) மற்றும் விஜயக்குமார் (28) ஆகியோரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...