தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வரும் ஏப்.1-ம் தேதி முதல் பள்ளி செல்லாக் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை கணக்கெடுத்து, அவர்கள் பள்ளிப் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி வரும் ஏப்.1-ம் தேதி தொடங்கி, மே மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகளை கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் வருகை பதிவேட்டின் அடிப்படையிலும், கிராமங்களில் வீடு வீடாகச் சென்றும், தொழில் நிறுவனங்களுக்குச் சென்றும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய, பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் கண்டறிப்படும் பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிகள், அரசு மாணவர் விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து படிப்பை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

