பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கம்பம் பள்ளத்தாக்கில் தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர்மழை காரணாக நீர் வ

Updated On :21 மே 2018, 6:59 pm

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர்மழை காரணாக நீர் வரத்து அதிகமானதால் கண்மாய், குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கம்பம் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக மாவட்டம் முழுவதும் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவுக்கு விவசாயம் செய்யப்படுகிறது. அதேபோல பருவமழையை நம்பியும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக போதுமான பருமவழை இல்லாத தால் விவாயம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் நிலத்தடிநீர் மட்டமும் குறைந்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. :இதனால் சின்னமனூரை சுற்றியுள்ள கண்மாய்கள், குளங்கள் மழைநீரால் நிரம்பி காட்சி யளிக்கின்றன. மழை நீரின் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில்
கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்திற்கு ஆதாரமாக இருக்கும் ஓடைகள் உள்ளிட்டவை சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் நீர் நிலைக்களுக்கு வரும் நீர் வரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதே போல் கண்மாய்களையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
எனவே உத்தமபாளையம் , சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் இன்னும் அதிக பரப்பளவுக்கு விவசாயம் செய்ய இயலும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.