போடி அருகே சிலமலையில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலர் வைரமுத்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியதாவது:
சிலமலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், சர்வே எண் 472/2 ஏ-ல் உள்ள நிலத்தில் அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை தற்போது வரை வருவாய் துறையினர் முறையாக நில அளவை செய்து உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை.
இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து, அதற்குரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தாயாகும் ஜன நாயகன் பட நடிகை!

ரெனால்ட் இந்தியா ஏப்ரல் மாத விற்பனை இரட்டிப்பு!

ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

