ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊர்பிரமுகர்கள் சிவஞானமூர்த்தி, கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வேலுச்சாமி, நாயுடு நலச்சங்கத் தலைவர் ஜெயராமன், தமிழ் விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வறட்சியால் பாதித்துள்ள ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 30 கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், கண்மாய், ஊருணிகளுக்கு தேவையான நீர் ஆதாரத்தை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் கொண்டு வந்து விவசாயத்திற்கு பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்த திட்டங்களை விளக்கி தமிழ் விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவர் சின்னச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் ராமராஜ், பட்டிமன்ற நடுவர் இளங்கோ உள்ளிட்டோர் பேசினர். ஒக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜாராம் நன்றி கூறினார். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுக்கடைகள் மூடல்: முதல்வர் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்! - கமல்ஹாசன் எம்.பி.

அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு!
ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம்: மு.க. ஸ்டாலின்
மந்திரி பதவிக்காக த.வெ.க.விடம் மண்டியிட்டு... சி.வி. சண்முகம் தரப்புக்கு எதிராக அதிமுக அறிக்கை!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
