எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

வீட்டுமனை வழங்க தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை

போடி வட்டாரம், கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.

Updated On :26 பிப்ரவரி 2019, 2:10 am IST

போடி வட்டாரம், கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கொழுக்குமலை எஸ்டேட் தொழிலாளர்கள் 30 பேர் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: கொழுக்குமலை தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகத்துக்கு உள்பட்ட இடத்தில் 40 தோட்டத் தொழிலாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். பணி ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு சொந்த ஊர்களில் வீடு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாததால், கொழுக்குமலையை விட்டுச் செல்லமுடியாமல் அங்கேயே வசித்து வருகிறோம்.
எனவே, கொழுக்குமலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்கவேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.