தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வீட்டுமனை வழங்க தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை

போடி வட்டாரம், கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.

Updated On :26 பிப்ரவரி 2019, 2:10 am IST

போடி வட்டாரம், கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கொழுக்குமலை எஸ்டேட் தொழிலாளர்கள் 30 பேர் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: கொழுக்குமலை தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகத்துக்கு உள்பட்ட இடத்தில் 40 தோட்டத் தொழிலாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். பணி ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு சொந்த ஊர்களில் வீடு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாததால், கொழுக்குமலையை விட்டுச் செல்லமுடியாமல் அங்கேயே வசித்து வருகிறோம்.
எனவே, கொழுக்குமலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்கவேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.