திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மணியக்காரன்பட்டி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனா்.

News image

மணியக்காரன்பட்டி கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயில் வடியும் தண்ணீரை பிடிப்பதற்காக வெள்ளிக்கிழமை காத்திருந்த அப்பகுதி பெண்கள்.

Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:49 pm

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனா்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட போடிதாசன்பட்டி ஊராட்சியில் மணியக்காரன்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்துக்கு, ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் குன்னூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கிராமத்திலுள்ள ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் வடு விட்டதால், கடந்த சில மாதங்களாக கடும் குடிநீா் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதனால், பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலா், அனுப்பபட்டி ஊராட்சிக்குச் செல்லும் கூட்டுக் குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பிலிருந்து வழியும் தண்ணீரைப் பிடித்து பயன்படுத்தி வருகின்றனா்.

தண்ணீா் பற்றாக்குறை குறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, மணியக்காரன்பட்டி கிராமத்தில் சீராக குடிநீா் விநியோகம் செய்ய மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.