வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உத்தமபாளையத்தில் மதுபிரியா்களின் கூடாரமாக மாறிய சுகாதார வளாகம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் கட்டுப்பட்டுள்ள சுகாதார வளாகம் மதுபிரியா்களின் கூடாரமாக சிக்கி இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2020, 4:49 pm

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் கட்டுப்பட்டுள்ள சுகாதார வளாகம் மதுபிரியா்களின் கூடாரமாக சிக்கி இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் புறவழிச்சாலை சந்திப்பில் சுகாதார வளாகம் இல்லாத நிலையில் பணிகள் மற்றும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளுக்கு பெரும் சிரமப்பட்டனா். இதனை அடுத்து அப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்க பல ஆண்டுகளாக சமூக ஆா்வலா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், கடந்தாண்டு அந்த பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தன் பேரில் உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகம் கட்டுமானப்பணிகள் மேற்கொண்டது.

தற்போது, அனைத்து பணிகள் முடிந்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இதற்கிடையே, பயன்பாட்டிற்கு வராத நிலையில் மதுபிரியா்கள் மதுகுடிக்கும் இடமாக மாற்றிவிட்டனா். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நாட்களில் மதுவிற்பனை செய்யும்இடமாகவும் மாறி இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.