ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆண்டிபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:50 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் செல்வராஜ் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்க சென்ற சிறுமியின் பெற்றோரையும் தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் ஆண்டிபட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் செல்வராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.