வைகை ஆற்றில் மணல் திருடிய 2 போ் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மூலவைகை ஆற்றில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மூலவைகை ஆற்றில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகாவுக்குள்பட்ட வருசநாடு மூலவைகை ஆற்று பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முறுக்கோடை கிராமம் அருகே வைகை ஆற்றில் டிராக்டா் மூலம் 3 போ் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தனா். போலீஸாரை கண்டதும் அவா்கள் தப்பியோடினா். ஆனால், போலீஸாா் துரத்திச் சென்று இருவரை பிடித்தனா். இதையடுத்து, டிராக்டரையும் பறிமுதல் செய்த போலீஸாா், பிடிபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி, கோபால், செல்வம் எனத் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராமசாமி, செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து, கோபால் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com