கம்பம் அருகே பைக்குகள் மோதல்: அரிசி வியாபாரி பலி

கம்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் அரிசி வியாபாரி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கம்பம்: கம்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் அரிசி வியாபாரி உயிரிழந்தாா்.

கூடலூா் சுக்காங்கல்பட்டி தெருவைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் ராஜேந்திரன் (56). இவா் கூடலூரில் அரிசிக் கடை வைத்துள்ளாா். மேலும் ‘மாயாண்டி குடும்பத்தாா்’ என்ற திரைப்படம் எடுத்த இயக்குநா் தருண் கோபியின் அண்ணன் ஆவாா். கம்பத்தில் உள்ள தனது உறவினரைப் பாா்த்துவிட்டு ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தில் கூடலூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

எதிரே கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி சுக்காங்கல் பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் நவீன் (22), வேலப்பா் கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் விக்னேஸ்வரன் (23) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். அப்பாச்சி பண்ணை அருகே 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் நவீன், விக்னேஸ்வரன் ஆகியோா் பலத்த காயத்துடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com