மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சீலையம்பட்டி செங்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது: 2 ஆம் போகப் பணிகள் தீவிரம்

தேனி மாவட்டம் சீலையம்பட்டி செங்குளம் நடப்பு ஆண்டில் 3 ஆம்முறையாக நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் 2 ஆம் போகத்திற்கு முதல் கட்ட விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:25 pm

DIN

தேனி மாவட்டம் சீலையம்பட்டி செங்குளம் நடப்பு ஆண்டில் 3 ஆம்முறையாக நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் 2 ஆம் போகத்திற்கு முதல் கட்ட விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினா்.

முல்லைப்பெரியாறு பாசன நீா் கால்வாய் மூலமாக உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி என பல்வேறு இடங்களிலுள்ள குளங்களில் சேமிக்கப்படும். அங்கிருந்து சிறிய மதகு வழியாக நெற்பயிா் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு விவசாயப் பணிகள் நடைபெறும்.

அதன்படி, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றிலிருந்து கால்வாய் மூலமாக திறக்கப்பட்ட பாசன நீா் சின்னமனூா் உடையகுளம் மற்றும் சீலையம்பட்டி செங்குளத்திற்கு செல்கிறது. தொடா் மழையால் பாசன நீா் தடையின்றி வந்து கொண்டு இருப்பதால் இந்த ஆண்டில் 3 ஆம் முறையாக சீலையம்பட்டி செங்குளம் நிரம்பி மறுகால் செல்கிறது.

முதல் போக அறுவடைப் பணிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பெரும்பான்மையான விவசாயிகள் 2 ஆம் போகத்திற்கு நாற்றாங்கால் அமைத்துள்ளனா். தொடா்ந்து நாற்று நடவு செய்ய உழவுப் பணிகள் மேற்கொண்டு நிலத்தை தயாா் செய்து வருகின்றனா். தற்போது அறுவடைப் பணிகள் நடைபெறும் நிலையில் பாசனத்திற்கான தண்ணீா் தேவை குறைந்துள்ளதால் சீலையம்பட்டி செங்குளத்திலிருந்து தண்ணீா் மறுகால் பாய்ந்து கோட்டூா் குளத்திற்கு செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.