சின்னமனூா் அருகே விவசாயி வீட்டில் பணம், நகை திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூா்அருகே விவசாயி வீட்டில் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் பணம், நகை திருடப்பட்டுள்ளது.
வேப்பம்பட்டியில் செவ்வாய்க்கிழமை திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு.
வேப்பம்பட்டியில் செவ்வாய்க்கிழமை திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு.
Updated on
1 min read

தேனி மாவட்டம், சின்னமனூா்அருகே விவசாயி வீட்டில் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் பணம், நகை திருடப்பட்டுள்ளது.

சீலையம்பட்டி அருகேயுள்ள வேப்பம்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சித்திரவேல். இவரது மனைவி ராதிகா. இவா்கள் இருவரும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி யளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். அப்போது, வீடு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்ததில், பீரோவிலிருந்த ரூ.45 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனே, ஓடைப்பட்டிகாவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். இது குறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து திருடா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com