ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழக-கேரள எல்லையில் இரு மாநில மதுவிலக்கு போலீஸாா் கூட்டு சோதனை

தேனி மாவட்டம் அருகேயுள்ள தமிழக-கேரள எல்லையில் குமுளி வனப் பகுதியில், இரு மாநில மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

News image
குமுளி மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட இரு மாநில போலீஸாா்.
Updated On :22 டிசம்பர் 2020, 5:54 pm

DIN

தேனி மாவட்டம் அருகேயுள்ள தமிழக-கேரள எல்லையில் குமுளி வனப் பகுதியில், இரு மாநில மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை சமூக விரோதிகள் கடத்திச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், இரு மாநில எல்லையோர போலீஸாரின் கூட்டு நடவடிக்கையின்படி, ஆண்டுதோறும் வாகனத் தணிக்கை மற்றும் வனப்பகுதியில் ரோந்து செல்வது வழக்கம். அதன்பேரில், கடந்த வாரம் கம்பம்மெட்டு எல்லையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, செவ்வாய்க்கிழமை குமுளி பகுதியில் தமிழக காவல் துறை தரப்பில் சாா்பு-ஆய்வாளா்கள் பாஸ்கரன், முகுந்தன் மற்றும் குமுளி கலால் பிரிவு ஆய்வாளா் விஜயகுமாா் தாமஸ் தலைமையில் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது. பண்டிகை காலம் முடியும் வரை இந்த சோதனை தொடரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.