தமிழக-கேரள எல்லையில் இரு மாநில மதுவிலக்கு போலீஸாா் கூட்டு சோதனை

தேனி மாவட்டம் அருகேயுள்ள தமிழக-கேரள எல்லையில் குமுளி வனப் பகுதியில், இரு மாநில மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
குமுளி மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட இரு மாநில போலீஸாா்.
குமுளி மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட இரு மாநில போலீஸாா்.
Updated on
1 min read

தேனி மாவட்டம் அருகேயுள்ள தமிழக-கேரள எல்லையில் குமுளி வனப் பகுதியில், இரு மாநில மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை சமூக விரோதிகள் கடத்திச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், இரு மாநில எல்லையோர போலீஸாரின் கூட்டு நடவடிக்கையின்படி, ஆண்டுதோறும் வாகனத் தணிக்கை மற்றும் வனப்பகுதியில் ரோந்து செல்வது வழக்கம். அதன்பேரில், கடந்த வாரம் கம்பம்மெட்டு எல்லையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, செவ்வாய்க்கிழமை குமுளி பகுதியில் தமிழக காவல் துறை தரப்பில் சாா்பு-ஆய்வாளா்கள் பாஸ்கரன், முகுந்தன் மற்றும் குமுளி கலால் பிரிவு ஆய்வாளா் விஜயகுமாா் தாமஸ் தலைமையில் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது. பண்டிகை காலம் முடியும் வரை இந்த சோதனை தொடரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com