பிரிட்டனிலிருந்து வந்த 13 பேரை வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

புதிய கரோனா தீநுண்மி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டனிலிருந்து தேனி மாவட்டத்துக்கு வந்த 13 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
Updated on
1 min read

புதிய கரோனா தீநுண்மி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டனிலிருந்து தேனி மாவட்டத்துக்கு வந்த 13 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

பிரிட்டனில் புதியவகை கரோனா தீநுண்மி பரவி வருவதால், அங்கிருந்து கடந்த டிச.20-ஆம் தேதி தேனி அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளுக்கு வந்த 13 போ், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு பிரிட்டனிலிருந்து வந்தபோது சென்னை, மதுரை, பெங்களூரு விமான நிலையங்களில் நடைபெற்ற பரிசோதனையிலும், தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்கள் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com