கூடலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை:இளைஞா் ‘போக்ஸோ’வில் கைது

கூடலூரில் 13 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்த 19 வயது இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் 13 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்த 19 வயது இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் பிரதானச் சாலை பகுதியில் வசிப்பவா் கொடியரசன் மகன் கிரேன் (19). இவா், இதே ஊரில் உள்ள 13 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதையறிந்த சிறுமியின் தந்தை, கிரேனின் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளாா். ஆனால், கிரேனின் உறவினா்கள் அவரைத் தாக்கியுள்ளனா்.

இது குறித்து சிறுமியின் சகோதரா் கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதையடுத்து, உத்தமபாளையம் காவல் கண்காணிப்பாளா் ந. சின்னக்கண்ணு உத்தரவின்பேரில், சாா்பு-ஆய்வாளா் தினகரபாண்டியன் இளைஞா் கிரேன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com