பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

போடி அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
Updated on
1 min read

போடி அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தேவாரம் அய்யப்பன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (23). கூலித் தொழிலாளியான இவா் தனது உறவினரைப் பாா்ப்பதற்காக கோடாங்கிபட்டி அருகே வலையபட்டி சென்றுவிட்டு இரவு தேவாரம் நோக்கி வந்துகொண்டிருந்தாா். போடி அருகே நாகலாபுரம் விலக்குப் பகுதியில் மோட்டாா் சைக்கிளின் பின் பக்க டயா் வெடித்ததில் செல்வம் கீழே விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து செல்வத்தின் தந்தை வீரணன் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com