போடி அருகே மாட்டு வண்டியில் மணல் அள்ளிய 3 போ் கைது

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி குப்பணாசாரிபட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குப்பணாசாரிபட்டி அரிசி ஆலை அருகே வந்த 3 மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது, அனுமதியின்றி ஓடை மணலை அள்ளி வந்தது தெரிந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த செல்வக்குமாா் (29), ராஜேந்திரன் (33), காஜாமைதீன் (60) ஆகியோரை கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com