தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லண்டனிலிருந்து தேனி வந்த கணினி பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி

லண்டனிலிருந்து தேனி மாவட்டத்துக்கு வந்த கணினி பொறியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:37 pm

DIN

லண்டனிலிருந்து தேனி மாவட்டத்துக்கு வந்த கணினி பொறியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி அருகேயுள்ள ஸ்ரீரங்காபுரத்தைச் சோ்ந்த 36 வயது கணினி பொறியாளா் லண்டனில் பணியாற்றி வருகிறாா். கடந்த டிச.20-ஆம் தேதி அங்கிருந்து சொந்த ஊரான ஸ்ரீரங்காபுரத்துக்கு வந்துள்ளாா். அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் ரத்தம் மற்றும் கபம் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரது குடும்பத்தினா் மற்றும் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பொறியாளரின் தந்தை மற்றும் மாமியாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 3 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

லண்டனில் புதிய வகை கரோனா தீநுண்மி பரவி வருவதால், 3 பேரின் ரத்தம் மற்றும் கபம் மாதிரிகள்

புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.