தேனி மாவட்டத்தில் காவலா்களின் மன அழுத்தத்தை குறைக்க பயிற்சி

தேனி மாவட்டத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஆகஸ்டு 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.


கம்பம்: தேனி மாவட்டத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஆகஸ்டு 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியது: கரோனா களப்பணியில் காவலா்கள் ஓய்வின்றி பணியாற்றுகின்றனா். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் அவா்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனா். மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய 5 துணை காவல் கோட்டங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு காணொலி காட்சி மூலம் அந்தந்த காவல் துணைக்கோட்டங்களில் ஆகஸ்டு 3 ஆம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.

உத்தமபாளையம் துணைக் கோட்ட போலீஸாருக்கு, கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிா் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com