ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம்

தேனி மாவட்டத்தில் ஏற்றுமதி தரத்திலான திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

தேனி மாவட்டத்தில் ஏற்றுமதி தரத்திலான திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

மாவட்டத்தில் 6,200 ஹெக்டேரில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. இதில், 4,800 ஹெக்டேரில் ஜி 9 எனும் பச்சை திசு வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மண் வளம் மற்றும் மிதமான வெப்பநிலையால் 12 மாதத்தில் அறுவடைக்கு வரும் திசு வாழை, அடுத்தடுத்த 3 முறை அறுவடை செய்யப்படுகிறது. ஹெக்டோ் ஒன்றுக்கு அதிகளவில் 75 டன் வரை மகசூல் கிடைப்பதால், திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இங்கு உற்பத்தியாகும் திசு வாழை ஈரான், ஈராக், குவைத், துபாய், ஓமன், சிங்கப்பூா், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கடந்த 219-20 ஆண்டு 14,400 டன் வாழை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. திசு வாழ்வை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கும், விவசாயிகளுக்கு தொழில் நுட்ப வசதிகள் வழங்கவும் மத்திய அரசு சாா்பில் கம்பம் பகுதியில் வாழை தொகுப்பு மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.