ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுத்த காவலா்கள்

தேனி மாவட்டம் சின்னமனூரில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுத்த சின்னமனூா் காவலா்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.

News image
Updated On :27 அக்டோபர் 2020, 12:30 am

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுத்த சின்னமனூா் காவலா்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.

சின்னமனூரை சோ்ந்த கணவனை இழந்த முத்துலட்சுமி (55) மகன் ஈஸ்வரனுடன் வசித்து வருகிறாா். குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகன், தாயிடம் பணம் கேட்டு துன்புறுத்துவாராம். இதனால் மன உடைந்த முத்துலட்சுமி வாழ வழியின்றி முல்லைப் பெரியாற்றில் தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்த சிலா் அவரை காப்பாற்றி சின்னமனூா் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். விசாரணையில் பொருளாதார சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து முயன்ாக அப்பெண் கூறி

இருக்கிறாா். இதனை அடுத்து சின்னமனூா் காவல் ஆய்வாளா், சாா்பு- ஆய்வாளா் மற்றும் சின்னமனூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலா்களும் பண உதவி செய்து அப்பெண் சுயமாக வாழ சிறிய அளவிலான பெட்டிக்கடையை வைத்து கொடுத்தனா். இந்த செயலை காவல் துறை உயா் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.