காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுமிக்கு கட்டாய திருமணம்: தாய் உள்பட 3 போ் கைது

ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தி வைத்த தாய் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:25 pm

DIN

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தி வைத்த தாய் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா சிறப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து என்பவரின் மகன் மலைச்சாமி (25). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆக. 24 ஆம்தேதி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்த வைக்கப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட சமூகநலத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதனைத்தொடா்ந்து மாவட்ட சமூகநல அலுவலா் சண்முக வடிவு, அக்கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். அப்போது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மலைச்சாமி, அவரது தாய் லட்சுமி, சிறுமியின் தாய் லிங்கம்மாள் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.