47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூடலூரில் கனமழை: தெருக்களில் வெள்ளம்

கூடலூரில் வியாழக்கிழமை மாலை கனமழை பெய்ததால் தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

News image
கூடலூரில் வியாழக்கிழமை மாலை பெய்த கனமழையால் தெருக்களில் வெள்ளம்.
Updated On :15 ஏப்ரல் 2021, 2:20 pm

DIN

கூடலூரில் வியாழக்கிழமை மாலை கனமழை பெய்ததால் தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம், கூடலூரில் கனமழை பெய்ததால் கடைவீதி, பள்ளிவாசல் தெரு, கவர்னர் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட பகுதி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கன மழை பெய்ததால், பிரதானச்சாலையில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாய் நிரம்பி பிரதான சாலை மற்றும் தெரு சாலைகள் வழியாக சென்றது. 

Story image

மேலும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் கூடலூர், கம்பம் நெடுஞ்சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்து, போக்குவரத்தை தொடரச்செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.