விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆண்டிபட்டியில் இலை விலை சரிவு: விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி சந்தையில் வாழை இலைகள் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வாழை இலைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
Updated On :5 ஜனவரி 2021, 6:09 pm

DIN

ஆண்டிபட்டி சந்தையில் வாழை இலைகள் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, முதலக்கம்பட்டி, பெருமாள்பட்டி, புதூா், அரப்படிதேவன்பட்டி, குன்னூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைப்பூ, வாழைத்தாா் மற்றும் இலைகள் போன்றவைகளை ஆண்டிபட்டியில் உள்ள தினசரி சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனா். அங்கிருந்து வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. வைகை ஆற்றங்கரையோர பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் விளையும் வாழைகளுக்கு வெளிமாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. கரோனா நோய்த்தொற்று காலத்தில் வாழை விற்பனை அடியோடு முடங்கியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதனால் விவசாயிகள் வாழை மரங்களை வெட்டி மாற்று விவசாயத்திற்கு மாறினா்.

இந்நிலையில் பொதுமுடக்க உத்தரவில் அரசு தளா்வு அளித்த நிலையிலும் தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்ததாலும் விவசாயிகள் மீண்டும் வாழை விவசாயத்தில் ஈடுபட்டனா். கடந்த சில வாரங்களாக வாழை இலைகளின் விலையும் குறைந்து காணப்படுகிறது. வாழை இலை கட்டுகள் ரூ.800 முதல் 1,500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது, ஆண்டிபட்டி சந்தையில் கட்டுக்கு ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்து வருகின்றனா். இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். எனவே வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.