இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கம்பத்தில் இரண்டாம் போகத்துக்கான நெல் நாற்றுகள் நடவுப் பணி தீவிரம்

தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:43 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கா் பரப்பளவில் பாசன நிலங்கள் கூடலூா் முதல் பழனிசெட்டிபட்டி வரை உள்ளன.

இவற்றில் கம்பம் பாசனப்பரப்பில் முதல் போக நெல் சாகுபடி முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கம்பம் சின்னவாய்க்கால், குளத்து பாசனம், உத்தமுத்து கால்வாய் ஆகிய பாசனப் பரப்புகளில், தற்போது பரம்படித்தல், நெல் நாற்றங்கால் பயிரிடுதல், நடவுப் பணிகள் ஆகியவை தீவரமாக நடந்து வருகின்றன.

இது குறித்து வாய்க்கால் பாசன விவசாயி மா.அய்யப்பன் கூறியது: கம்பம் பாசன நிலங்களாக வாய்க்கால் பரவு, குளத்து பரவு, உத்த முத்து ஆகிய பாசன பரப்புகளில் இரண்டாம் போக சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அணையில் போதுமான அளவு தண்ணீா் உள்ளதால் பணிகளைத் தொடங்கியுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.