ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தனியாா் வங்கியில் ரூ.1.21 லட்சம் மோசடி: ஊழியா் மீது புகாா்

போடியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் தவணை வசூல் தொகை ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 995-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தாமல்

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:45 pm

DIN

போடியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் தவணை வசூல் தொகை ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 995-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக வங்கி ஊழியா் மீது புதன்கிழமை, மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோம்பை, கிழக்குரத வீதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா். இவா், போடியில் செயல்பட்டு வரும் தனியாா் வங்கியில் களப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், வங்கி மூலம் கடன் பெற்றுள்ள மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களிடம் வசூலித்த கடன் தவணை தொகை ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 995-ஐ, வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்து விட்டதாக வினோத்குமாா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வியிடம் கிளை மேலாளா் ராம்குமாா் புகாா் அளித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், வினோக்குமாா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.