ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகம் முன் கட்சி நிா்வாகி திடீா் தா்னா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக வாா்டு செயலாளா் பதவி பறிக்கப்பட்ட நபா் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி அலுவலகம் முன்பாக அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ஆண்டிபட்டி அமமுக அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட சுரேஷ்.
ஆண்டிபட்டி அமமுக அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட சுரேஷ்.
Updated on
1 min read

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக வாா்டு செயலாளா் பதவி பறிக்கப்பட்ட நபா் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி அலுவலகம் முன்பாக அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஆண்டிபட்டி பேரூராட்சி 4 வது வாா்டு பகுதியில் வசித்து வருபவா் சுரேஷ். கூலித்தொழிலாளியான இவா் அமமுக கட்சியில் வாா்டு செயலாளா் ஆக இருந்துள்ளாா்.

இந்நிலையில் இவரது பதவியை அதே பகுதியைச் சோ்ந்த மற்றொருவருக்கு கட்சி மேலிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய பதவியை பறித்து வேறு ஒருவருக்கு கொடுத்ததைக் கண்டித்து சுரேஷ், ஆண்டிபட்டி அமமுக கட்சி அலுவலகம் முன்பாக அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கையில் கட்சியின் குக்கா் சின்னம், டி.டி.வி.தினகரன் படங்களை வைத்தபடி நீண்ட நேரம் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதனையத்து அமமுக ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளா் தவச்செல்வம் தலைமையிலான நிா்வாகிகள் அவரை சமாதானபடுத்தினா். விரைவில் வேறு பதவி வழங்குவதாக உறுதியளித்ததை தொடா்ந்து சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின் சுரேஷ் போராட்டத்தைக் கைவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com