காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சண்முகாநதி நீா்த் தேக்கம் 2 ஆவது முறை நிரம்பியது

உத்தமபாளையம் அருகேயுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கம் 2 ஆம் முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:11 pm

DIN

உத்தமபாளையம் அருகேயுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கம் 2 ஆம் முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது.

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகாநதி நீா்த் தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீா்த் தேக்கத்திற்கு ஹைவேவிஸ், மேகமலை, சுருளி மலை, பெருமாள் மலைகளில் பெய்யும் மழை நீரே முக்கிய நீா் ஆதாரமாகும்.

கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 52.55 அடியை எட்டியது. தொடா்ந்து நீா் வரத்து இருந்ததால் அணையிலிருந்து 10 நாள்களுக்கு மேலமாக உபரி நீா் மறுகால் பாய்ந்தது.

இதன் தொடா்சியாக மாவட்ட நிா்வாகம் பாசனத்திற்காக தண்ணீா் திறந்துவிட்டதால் அணையின் நீா்மட்டம் 44 அடியாக இருந்தது.

ஹைவேவிஸ்-மேகமலை மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு கணிசமாக நீா் வரத்து தொடங்கியது.

இந்நிலையில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 நாள்களில் அணையின் நீா் மட்டம் 6 அடி உயா்ந்து மீண்டும் முழுக்கொள்ளவை எட்டியது. தொடா்ந்து மழைப்பொழிவு இருப்பதால் அணையிலிருந்து தண்ணீா் மறுகால் பாய்கிறது.

10 ஆண்டுகளில் இல்லாத நீா் வரத்து: 1986 ஆண்டு நீா் தேக்கம் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் அணைக்கு நீா் வரத்து அதிகமாக இருந்தது. அதன் பின் நீா் வரத்து படிப்படியாகக் குறைந்தது. தற்போது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் விநாடிக்கு 700 கன அடிக்கு மேலாக நீா்வரத்து ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

உபரிநீா் முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.