ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பெரியகுளத்தில் தடுப்பூசி செலுத்த காத்திருந்த முதியவர்கள்: கரோனா பரவும் அபாயம்

பெரியகுளத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கரோனா பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

News image
தடுப்பூசி செலுத்த காத்திருந்த முதியவர்கள்.
Updated On :31 மே 2021, 7:44 am

DIN

பெரியகுளத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கரோனா பரவும் அபாயம்  ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் திங்கள்கிழமையன்று 18 - 44 வயதுடையவர்களுக்கு 4 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.

Story image

அரசு அலுவலர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் காலையில் இருந்து வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

முறையாக டோக்கன் வழங்கியிருந்தால் கூட்டம் நெரிசல் ஏற்பட்டு இருக்காது. ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி கூடுவதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே முறையாக பதிவு செய்து, கூட்ட நெரி சலின்றி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.