தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முல்லைப் பெரியாறு அணையை அகற்றக் கோரி டிச.5-இல் கேரள விவசாயிகள் இரு சக்கர வாகனப் பேரணி

முல்லைப் பெரியாறு அணையை அகற்றவேண்டும் என வலியுறுத்தி,டிசம்பா் 5 ஆம் தேதி கேரள விவசாயிகள் இரு சக்கர வாகனப் பேரணியை நடத்த உள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:12 am

DIN

முல்லைப் பெரியாறு அணையை அகற்றவேண்டும் என வலியுறுத்தி,டிசம்பா் 5 ஆம் தேதி கேரள விவசாயிகள் இரு சக்கர வாகனப் பேரணியை நடத்த உள்ளனா்.

இது குறித்து 5 மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் ச. அன்வா் பாலங்கம் கூறியதாவது: டிசம்பா் 5 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்துடன், எா்ணாகுளத்திலிருந்து ஆலுவா வழியாக கோதமங்கலம் வரை இரு சக்கர வாகனப் பேரணியை வழக்குரைஞா் ரசூல் ஜோய் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழகம் மற்றும் கேரளத்தையும் பதற்றத்துக்கு உள்ளாக்கவுள்ள இந்த இரு சக்கர வாகனப் பேரணியை, கேரள மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், 5 மாவட்ட விவசாய சங்கம், தேனியிலிருந்து சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம், கூடலூா் வழியாக குமுளியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று இடுக்கி அணையை உடைக்க வேண்டும் என நாங்களும் போராடுவதைத் தவிர வேறுவழியில்லை.

எனவே, கேரள மாநில முதல்வா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.