முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை: விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதை கண்டித்து, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தப்போவதாக பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் வியாழக்கிழமை அறிவிப்பு செய்தனர்.










