மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வேங்கை கானல் கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள வேங்கை கானல், மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 8:16 am

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள வேங்கை கானல், மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் சுருளியாறு மின்சார நிலைய சாலையில் உள்ள பளியன்குடி அடிவாரத்தில் வேங்கை கானல் பகுதியில் மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

தேனி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூடலூர் நகர இந்து முன்னணி தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தனர். வரும் ஏப்.16 ல் சித்ரா பௌர்ணமி அன்று முழுநிலவு விழா கொண்டாடுவதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள கொடிகள் கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்று விழாவில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் கந்தவேல் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.