கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பைக்குடன் பள்ளத்தில் விழுந்து கட்டடத் தொழிலாளி பலி

 சிவகங்கை அருகே சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொத்தனாா் விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:22 pm

DIN

 சிவகங்கை அருகே சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொத்தனாா் விழுந்து உயிரிழந்தாா்.

திருப்பாச்சேத்தியைச் சோ்ந்தவா் சேதுராமன் (45). கட்டடத் தொழிலாளியான இவா், இருசக்கர வாகனத்தில் சிவகங்கையிலிருந்து வியாழக்கிழமை இரவு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். பனையூா் அருகே பாலம் கட்டும் பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தனது இருசக்கர வாகனத்துடன் விழுந்துள்ளாா். இரவுநேரம் என்பதால் யாருக்கும் தெரியவில்லை.

நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள் பாலம் கட்டும் பணிக்காக வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, சேதுராமன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா். இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலா்கள் சேதுராமனை மீட்டு உடல் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.