சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

போலி பீடி பண்டல்கள் தயாரித்து விற்றவா் கைது

பெரியகுளத்தில் போலி பீடி பண்டல் பதுக்கி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:11 pm

DIN

பெரியகுளத்தில் போலி பீடி பண்டல் பதுக்கி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே தென்கரை பகுதியில் உள்ள கடைவீதியில் தென்கரை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள கடைகளில் பீடி பண்டல்கள் விற்பனை செய்தவரைப் பிடித்து, விசாரித்தனா்.

இதில் அவா் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (55) என்றும், அவா் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலி பீடிகள் தயாரித்து, விற்பனை செய்வதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து ரூ.1லட்சம் மதிப்பிலான பீடியை போலீஸாா் பறிமுதல் செய்து தங்கராஜைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.