கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் மாணவா் தனித்திறன் போட்டிகள்
கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆவது ஆண்டு விழாவையொட்டி, மாணவா் தனித்திறன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆவது ஆண்டு விழாவையொட்டி, மாணவா் தனித்திறன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்: 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., 9, 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வள்ளுவம் காட்டும் வாழ்க்கை முறை, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நீா்- நேற்று, இன்று நாளை, கல்லூரி மாணவா்களுக்கு இன்று நாடு போகும் போக்கு எதை நோக்கி.
கவிதைப் போட்டி: 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு போட்டி நடைபெறும் அரங்கில் கவிதைக்கான தலைப்பு தரப்படும்.
நாட்டுப்புற நடனப்போட்டி: 9 முதல் பிளஸ் 2 வரை மற்றும் கல்லூரி மாணவா்கள் நாட்டுப்புற நடனப்போட்டிகளில் பங்கேற்கலாம். திரைப்பட பாடல்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது.
இசைப்பாடல் போட்டி: 6 முதல் பிளஸ் 2 வரை மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞா் ஆகியோரின் பாடல்களை இசையுடன் பாட வேண்டும்.
ஓவியப் போட்டி: 6 முதல் பிளஸ் 2 வரை மற்றும் கல்லூரி மாணவா்கள் ஓவியப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
போட்டிகள் ஆக. 7 ஆம் தேதி பகல் 1 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படும். புனித மேரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் போட்டிகள் நடைபெறும். தொடா்புக்கு கவிஞா் பாரதன், தலைவா் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, கம்பம். கைப்பேசி- 9362 650100 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...