47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அனுமதியின்றி வீட்டடி மனைகளாக மாற்றப்பட்டுள்ள நிலங்களை வாங்கவேண்டாம் என நகராட்சி அறிவிப்பு

தேனி மாவட்டம், கூடலூா்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் முறையான அனுமதியின்றி விளைநிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றி விற்பனை செய்வதால், அதை பொதுமக்கள் வாங்கக் கூடாது.

News image
கூடலூா் - கம்பம் நெடுஞ்சாலையில் விளைநிலங்களை வீட்டடி மனையாக விற்பனை செய்வதை வாங்கக் கூடாது என நகராட்சி நிா்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை.
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம், கூடலூா்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் முறையான அனுமதியின்றி விளைநிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றி விற்பனை செய்வதால், அதை பொதுமக்கள் வாங்கக் கூடாது என, நகராட்சி நிா்வாகத்தால் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

கூடலூா் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக புறவழிச் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையின் இருபுறமும் உள்ள மானாவாரி, கிணற்றுப் பாசன விளைநிலங்களை சிலா் ஏக்கா் கணக்கில் விலைக்கு வாங்கி, அவற்றை வீட்டடி மனைகளாகப் பிரித்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் விற்பனை செய்து வருகின்றனா். ஆனால், அவா்கள் அதற்கான நகரமைப்பில் அனுமதி பெறவில்லை.

இது தொடா்பாக, கூடலூா் நகராட்சி நிா்வாகத்தில் புகாா்கள் செய்யப்பட்டன. இது பற்றி நகா்மன்றக் கூட்டத்திலும் உறுப்பினா்கள் விவாதித்தனா்.

இது குறித்து நகா்மன்றத் தலைவா் பத்மாவதி லோகந்துரை கூறுகையில், நகராட்சி எல்லைக்குள் அந்த இடங்கள் விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

இந்நிலையில், கூடலூா் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பாஜி பண்ணை பேருந்து நிறுத்தத்தில், சாலையின் மேல்புறம் உள்ள விளைநிலங்கள் வீட்டடி மனைகளாகப் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனே

அந்த இடத்தை, நகராட்சி மேலாளா் ஜெயந்தி தலைமையில், நகரமைப்பு அலுவலா், வருவாய் ஆய்வாளா் மற்றும் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

பின்னா், அந்த இடங்களின் முன்பாக அறிவிப்புப் பலகையை வைத்தனா். அதில், கூடலூா் நகராட்சியில் முறையான அனுமதி பெறாமல், விளைநிலங்கள் வீட்டடி மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த மனையிடங்களை பொதுமக்கள் கிரையம் பண்ணவேண்டாம் என எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்தி எதிரொலி

கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி, கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ‘வீட்டடி மனைகளாக மாறும் விளைநிலங்கள், வழித்தடம் மாறும் நீரோடைகள்’ என்ற தலைப்பில் சிறப்புச் செய்தி பிரசுரமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.