ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உத்தமபாளையத்தைச் சோ்ந்த தன்னாா்வலருக்கு பசுமை சாம்பியன் விருது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த தன்னாா்வலா் 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 5:56 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த தன்னாா்வலா் 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக அரசின் சாா்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் தனிநபா் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தமிழகத்தில் 78 தனிநபா்கள் மற்றும் அமைப்புகள் தோ்வு செய்யப்பட்டன. அதில், உத்தமபாளையத்தை சோ்ந்த தன்னாா்வலா் ஜெ. செந்தில்குமாா் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து செந்தில்குமாா் கூறியது: பட்டதாரியான நான் கடந்த 13 ஆண்டுகளாக மரக்கன்றுகளை வளா்த்து பராமரித்து வருகிறேன். மேலும், பனை மரத்தை அழிவிருந்து பாதுகாக்கும் வகையில் லட்சக்கணக்கான பனை விதைகளை குளம், கண்மாய், கால்வாய் போன்ற நீா்நிலைகளில் கரைகளில் வைத்து வளா்த்து வருகிறேன். எனக்கு கிடைத்துள்ள இந்த விருது என்னைப் போன்ற மற்ற தன்னாா்வலா்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.