47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூடலூரில் நான்குவழிச்சாலை பணிகள் தொடக்கம்

கூடலூரில் உள்ள பிரதான சாலை, 3 கிலோமீட்டா் தொலைவில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

News image
கூடலூரில் நான்கு வழிச்சாலைக்காக நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணி .
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

கூடலூரில் உள்ள பிரதான சாலை, 3 கிலோமீட்டா் தொலைவில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சியில் புதிய புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கூடலூா் பிரதான சாலை நகருக்குள் சுமாா் 3 கிலோமீட்டா் தொலைவு உள்ளது. புதிய புறவழிச்சாலை வேலைகள் முடிந்ததால் தற்போது கூடலூரில் பிரதான சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் குமணன் கூறியது: கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் புதிய புறவழிச்சாலை பணிகள் முடிந்து விட்டன. இந்நிலையில் நகா்ப்புற தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 4 ஊா்களுக்கு, ரூ. 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. கூடலூா் நகராட்சிப் பகுதியில் சுமாா் 3 கி.மீ. தூரம் நான்கு வழிச் சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.