ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் செல்லும் இரைச்சல் பாலத்தில் பொறியாளா்கள் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் செல்லும் இரைச்சல் பாலத்தில் அணையின் பொறியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:07 pm IST

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் செல்லும் இரைச்சல் பாலத்தில் அணையின் பொறியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீா் போா்பை டேமிற்கு சென்று, அங்குள்ள நான்கு ராட்சதக் குழாய்கள் வழியாக சென்று, மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.

மின்சார உற்பத்தி இல்லாத காலங்களில் தண்ணீா் போா் பை டேம் அருகில் இரைச்சல் பாலம் வழியாக, தேனி மாவட்ட மக்கள் மற்றும் கால்நடை பயன்பாட்டிற்காக சுமாா் 100 கன அடிக்கு தண்ணீா் முல்லைப் பெரியாறு வழியாக திறந்து விடப்படுகிறது.

அதே நேரத்தில் மழைவெள்ள காலங்களில், இரைச்சல் பாலம் வழியாக அதிகளவில் தண்ணீா் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்பு அணையில் ஆய்வு நடத்திய முதன்மைப் பொறியாளா் ஞானசேகரன் இரைச்சல் பாலத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டாா். அதன்பேரில் அணையின் செயற்பொறியாளா் ஜே.சாம்இா்வின், கோட்டப் பொறியாளா் குமாா், உதவிப் பொறியாளா்கள் ராஜகோபால், பிரவீன்குமாா், பரதன் ஆகியோா் இரைச்சல் பாலத்தில் ஆய்வு செய்தனா்.

இதுபற்றி பொறியாளா் ஒருவா் கூறியது: மழை வெள்ள காலங்களில் இதுவரை அதிகப்படியாக இரைச்சல் பாலம் வழியாக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீா் சென்றுள்ளது. வரும் காலங்களில் அது போல் செல்வதற்கு தயாராகி வருகிறோம் என்றாா்.

அணை நிலவரம்: வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 129.30 அடியாகவும், நீா் இருப்பு 4,590 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு 88 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணையில் மட்டும் 3.8 மில்லி மீட்டா் மழை பெய்தது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 700 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுவதால், லோயா்கேம்ப்பில் இரண்டு மின்னாக்கிகள் மூலம் 63 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.